Sunday, 29 July 2018

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு பற்றி உங்களிற்கு தெரியுமா / கோதுமை மற்றும் அது சார்ந்த உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன


கோதுமைமா மீது வரி அதிகரித்தால் நாட்டில் உள்ள அனைத்து  பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் (AIBOA) இணைந்து அனைத்து சகலவிதமான பேக்கரி பொருட்களின் விலைகளையும் உயர்த்துவோம் என்று கூறியுள்ளனர். பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரெரீரா ஆகியோர் சமீபத்தில் ஒரு ஊடகக் கலந்துரையாடலில் இதனை தெரிவித்திருந்தனர். நெல் உற்பத்தியின் உபரி இருந்தால் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்க கோதுமைமா மீது வரி விதிப்பது அவசியம் என்று கூறப்பட்டது.

நாட்டில் சாதாரணமாக 60 சதவிகிதம் மக்கள் மாத்திரமே கோதுமைமா மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்கின்றனர். அனைத்து உணவுகளை அரிசியினாலும் மேற்கொள்ளமுடியாது. அரிசி இறக்குமதி தேவை இல்லை என்றால்  இந்த ஆட்சி ஏன் அரிசி மற்றும் அரிசிப்பொருட்களை  இறக்குமதி செய்கிறது.  புதிய அரிசி வகைகளை  இறக்குமதி செய்ய முடிவு செய்தால் மற்றும் கோதுமைமா மீது வரியை அதிகரித்தால் அனைத்து பேக்கரி பொருட்களிலும் ஒரு திட்டவட்டமான விலை உயர்வு இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....